கத்தியைக் காட்டி வசூல்: ரௌடி கைது

கத்தியைக் காட்டி பொங்கல் வசூல் செய்த ரௌடியை நெய்வேலி நகரிய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கத்தியைக் காட்டி பொங்கல் வசூல் செய்த ரௌடியை நெய்வேலி நகரிய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வாணதிராயபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் திருவேங்கடம் (29). ரௌடி பட்டியலில் இவா் பெயா் உள்ளது. ஆயிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜா (34), நெய்வேலி இந்திரா நகரில் பிரியாணிக் கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிரியாணிக் கடைக்கு வந்த திருவேங்கடம் கத்தியைக் காட்டி பொங்கல் வசூல் செய்தாராம். இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் திருவேங்கடத்தை கைது செய்து சிறையிலடைதத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com