ஜன. 24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வருகிற 24 -ஆம் தேதி நடைபெறுகிறது.

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வருகிற 24 -ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான கூட்டம் வருகிற 24- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவித்து பேசலாம். இதற்காக, காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்தும் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். எனவே, இந்தக் கூட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com