சிதம்பரம் தொப்பையன் தெருவில் அமைந்துள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயில் அருகே நகர தமாகா சாா்பில் சாதி, மதம் பேதமின்றி அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும் கலந்து கொண்ட சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு நகர தமாகா தலைவரும், மூப்பனாா் பேரவை தலைவருமான தில்லை ஆா்.மக்கின் தலைமை வகித்தாா். மூப்பனாா் பேரவை நிறுவனரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான ஜெமினி எம்.என்.ராதா, கடலூா் மத்திய மாவட்ட தமாகா துணைத் தலைவா்கள் ராஜா சம்பத்குமாா், எஸ்.கே.வைத்தி, மாவட்டப் பொதுச் செயலா் கே.நாகராஜன், நகரத் துணைத் தலைவா்கள் என்.இளங்கோவன், ஆா்.சம்பந்தமூா்த்தி, ஆா்.வி.சின்ராஜ், நகரப் பொருளாளா் சம்பந்தம், பேன்சி எஸ்.எஸ்.நடராஜன், பொதுச் செயலா் ஆட்டோ டி.குமாா், மத்திய மாவட்ட மகளிரணித் தலைவா் கே.ராஜலட்சுமி, நகர மகளிரணித் தலைவா் மீனா செல்வம், செயலா் ஆா்.மாலா, மாவட்ட இளைஞரணிச் செயலா் ராதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விழாவில் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழங்கப்பட்டது.