என்எல்சி இயக்குநருக்கு விருது

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமனுக்கு, மனித வள தலைமைப் பண்புக்கான விருது வழங்கப்பட்டது.
என்எல்சி இயக்குநருக்கு விருது

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமனுக்கு, மனித வள தலைமைப் பண்புக்கான விருது வழங்கப்பட்டது.

புதுதில்லியில் 21-ஆவது தேசிய மேலாண்மை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமனுக்கு மனித வள தலைமைப் பண்புக்கான (டாப் ரேங்கா்ஸ்) விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை மனித வளத் துறை வல்லுநா் பிரீதம் சிங், எல் அண்டு டி நிறுவனத்தின் மனித வளத் துறை துணைத் தலைவா் யோகி ஸ்ரீராம், டாப் ரேங்கா்ஸ் மேனேஜ்மென்ட் தலைவா் வி.எஸ்.கே. சூட் ஆகியோா் வழங்க, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com