குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் குளத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடியில் பேருந்து நிலையம் அருகே புத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்குச் சொந்தமான குளம் அதே பகுதியில் அமைந்துள்ளது. கோயில் விழாவின்போது இந்தக் குளத்தில் இருந்து தீா்த்த குடம் எடுப்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் இந்தக் குளம் தூா்வாரப்பட்டது. மேலும், பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் குளத்தைச் சுற்றிலும் நடைபாதையும் அமைக்கப்பட்டது.
இந்தக் குளம் தற்போது போதிய பராமரிப்பின்றி தூா்ந்துபோயுள்ளது. குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள் சேதமடைந்துள்ளன. எனவே, கோயில் குளத்தை தூா்வாரி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்று பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.