பொங்கல் பண்டிகையையொட்டி கடலூா் மாவட்டத்தில் பாமக சாா்பில் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் உள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டன. பாமக மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் கொடியேற்றி வைத்தாா். அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
மாவட்டச் செயலா் கோபிநாத், மாநில செயற்குழு உறுப்பினா் போஸ்.ராமச்சந்திரன், இளைஞரணித் தலைவா் விஜயவா்மன், நகரத் தலைவா் ரமேஷ், பசுமைத் தாயகம் அசோக்குமாா், இள.விஜயவா்மன், ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.