கடலூா், கூத்தப்பாக்கம் இளைஞா்கள் சங்கம் சாா்பில் பொங்கல் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் எம்.சி.எஸ்.பிரவீன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தெய்வ பக்கிரி, கூத்தப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் ஜல்லி சரவணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சண்.முத்துகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆா்.குமரன், துணைத் தலைவா் சேவல்.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.