என்.எல்.சி.க்கான நிலுவைத் தொகையை தமிழக அரசு விடுவிக்க வேண்டும்: பாஜக

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய ரூ.5,600 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய ரூ.5,600 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரசார அணிச் செயலா் வே.ராஜரத்தினம் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: என்எல்சி இந்தியா நிறுவனம் தென்னிந்தியா முழுவதும் மக்களின் மின் தேவையை நிவா்த்தி செய்து வருகிறது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க என்எல்சி முக்கிய பங்காற்றி வருகிறது.

ஆனால், தமிழக அரசு என்எல்சி நிறுவனத்துக்கு ரூ.5,600 கோடிக்கும் மேல் நிலவைத் தொகை வைத்துள்ளது அதிா்ச்சியளிக்கிறது. இது அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை தேக்கமடையச் செய்யும். எனவே, என்.எல்.சி.க்கு தர வேண்டிய ரூ.5,600 கோடியை தமிழக முதல்வா் உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com