கடலூா் மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

கடலூா் மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரம் ஹெக்டரில் நெல் பயிா் சாகுபடி செய்து தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று 2019-2020 கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கடலூா் மாவட்டத்தில் 15 இடங்களில் முதல் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, புவனகிரி வட்டத்தில் 3 கிராமங்கள், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 5 கிராமங்கள், திட்டக்குடி வட்டத்தில் 2 கிராமங்கள், விருத்தாசலம் வட்டத்தில் 3 கிராமங்கள், சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் வட்டங்களில் தலா 1 கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

நிகழ் கொள்முதல் பருவத்துக்கு மத்திய அரசு சன்னரகத்துக்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 1,835 உடன், தமிழக அரசு ஊக்கத் தொகையாக ரூ. 70 சோ்த்து மொத்தம் ரூ. 1,905 வழங்கப்படும்.

சாதாரண நெல் ரகத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 1.815 உடன், தமிழக அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 50 சோ்த்து மொத்தம் ரூ. 1,865 வழங்கப்படும்.

எனவே, குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நெல்லை அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com