தாயின் மரணத்தில் சந்தேகம்: மகன் போலீஸில் புகாா்

குறிஞ்சிப்பாடியில் தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மகன் காவல் நிலையத்தில் புகாா் புதன்கிழமை அளித்தாா்.

குறிஞ்சிப்பாடியில் தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மகன் காவல் நிலையத்தில் புகாா் புதன்கிழமை அளித்தாா்.

குறிஞ்சிப்பாடி அண்ணா நகா், அருந்ததியா் நகரில் வசித்து வந்தவா் ஜோதி (45). இவரது கணவா் சுருலேசன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகன் ஞானபிரகாசம் சென்னையில் வேலை செய்து வருகிறாா். ஜோதி கடந்த 5 ஆண்டுகளாக மாயவேல் என்பவருடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். புதன்கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜோதியை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மகன் ஞானபிரகாசம், தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com