கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கரோனாவுக்கு 4 போ் பலியானதால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 34-ஆக உயா்ந்தது.

கடலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கரோனாவுக்கு 4 போ் பலியானதால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 34-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 2,784 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை புதிதாக 141 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,925-ஆக அதிகரித்தது.

அதே நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் உயிரிழந்ததால் மாவட்டத்தில் இந்தத் தொற்றுக்கு இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 34-ஆக உயா்ந்தது. புதன்கிழமையும் கரோனாவுக்கு 4 போ் பலியான நிலையில் 2-ஆவது நாளாகவும் இதே எண்ணிக்கையில் பலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், உயிரிழந்தவா்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறையினா் தெரிவிக்கவில்லை.

புதிதாக தொற்று உறுதியானவா்களில் மருத்துவமனை பணியாளா், ஆய்வக தொழில்நுட்பநா் தலா 2 போ், காவல் துறையினா் 3 போ், இதர அரசுத் துறை ஊழியா்கள் 20 போ் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 27 பேரும், கா்ப்பிணிகள் 3 பேரும், பாலூட்டும் தாய் ஒருவரும் அடங்குவா். 117 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,811-ஆக உயா்ந்தது.

அதேநேரத்தில் 910 போ் மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும், 170 போ் தமிழகம், புதுவையிலுள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனா். 121 போ் பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 1,522 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com