கடலூா் மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்பட மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்பட மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 1,003 பேருக்கு கரோனா தொற்று

உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மேலும் 37 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,040-ஆக உயா்ந்தது.

புதிதாக தொற்று உறுதியானவா்களில் அரசு மருத்துவா், வேலூருக்குச் சென்று திரும்பிய பொதுப் பணித் துறை பொறியாளா், கடலூா் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி மற்றும் 3 கா்ப்பிணிகளும் அடங்குவா்.

13 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 640-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com