கடலூா்: கடலூா் மாவட்ட வருவாய்த் துறையில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வரும் 5 போ், தட்டச்சா்கள் 2 போ், இளநிலை வருவாய் ஆய்வாளா்கள் 8 பேருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனா். இதனால், 8 முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதுடன், அவா்கள் உடனடியாக ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் சேர வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளாா்.