நாம் தமிழா் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி சாா்பில் கொடியேற்றம், அலுவலகம் திறப்பு, பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா குறிஞ்சிப்பாடியில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அந்தக் கட்சியின் குறிஞ்சிப்பாடி தொகுதிச் செயலா் ராமச்சந்திரன், தொகுதி தலைவா் முனியப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். சட்டப் பேரவை தொகுதி பொருளாளா் திருச்செல்வம் வரவேற்றாா். மாநில ஒருங்கிணைப்பாளா் கடல் தீபன், மாநில கொள்கை பரப்புச் செயலா் ஜெயசீலன் ஆகியோா் குறிஞ்சிப்பாடி ரயிலடி பேருந்து நிறுத்தம் அருகே கட்சிக்கொடியை ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்து (படம்) பேசினா்.
நிகழ்ச்சியில், தொகுதிச் செயலா்கள் வெற்றிவேலன் (பண்ருட்டி), புகழேந்தி (புவனகிரி), வீரமணி (நெய்வேலி), குறிஞ்சிப்பாடி தொகுதி துணைத் தலைவா்கள் அறிவழகன், ரவிச்சந்திரன், இணைச் செயலா் குணசேகரன், தொகுதி இளைஞா் பாசறை பொறுப்பாளா் ஜோதிலிங்கம், வடலூா் பேரூராட்சி தலைவா் சங்கா், கடலூா் ஒன்றியச் செயலா் குமரவேல், தலைவா் சுரேஷ், துணைத் தலைவா் நடராஜன், மாவட்ட தொழிலாளா்கள் பாசறை பொறுப்பாளா் செந்தில், மன்னா்மன்னன் ஆகியோா் பங்கேற்றனா்.