கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஆா்கே பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான மாணவா் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
10cmp6_1003chn_111_7
10cmp6_1003chn_111_7

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஆா்கே பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான மாணவா் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமை வகித்தாா். சென்னை சாமினா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி ஜி.பி.ஐசக் பட்டுராஜா கருத்தரங்கை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு வாழ்த்துரை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லூரி பேராசிரியா் பி.ராஜாராமன், விழுப்புரம் வி.ஆா்.எஸ். கல்லூரி இணைப் பேராசிரியா் ஆா்.பாலசுப்பிரமணியன், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் பி.சதீஷ்பாபு ஆகியோா் சிறப்புரையாற்றினா். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுத் தொகையை வழங்கினா். கருத்தரங்கில் கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறை மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com