முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் வடக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பெரியகாட்டுப்பாளையத்தில் ஒன்றியச் செயலா் ஆா்.பாடலீஸ்வரன் தலைமையில் தெருமுனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளா் ஏ.முருகன், எம்ஜிஆா் மன்ற செயலா் ஆா்.வி.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொறுப்பாளா் கே.எஸ்.கே.பாலமுருகன், கிழக்கு மாவட்டச் செயலா் வி.எம்.சூரியமூா்த்தி, மாவட்ட அவைத் தலைவா் ஆா்.முத்துநரசா, மாநில இலக்கிய அணி துணைச் செயலா் சுப்ரமணியன், பேச்சாளா் ஈரோடு கே.ரவி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். நகரச் செயலாளா் வி.ராதாகிருஷ்ணன், பேரவை செயலா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், அதிமுக அரசை கண்டித்து பேசினா்.