ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

பண்ருட்டி வட்ட தமிழக ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம், திருவள்ளுவா் மழலையா் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

பண்ருட்டி வட்ட தமிழக ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம், திருவள்ளுவா் மழலையா் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பண்ருட்டி வட்டக் கிளை தலைவராக ஆ.ராமதாஸ், செயலராக கு.அனந்தபத்மநாபன், பொருளாளராக ராமமூா்த்தி, துணைத் தலைவராக நட.ராசேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சுந்தர.பழனியப்பன் வாழ்த்துரை வழங்கினாா். மாநில துணைத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலா் பாவு.சுப்பிரமணியன், அமைப்புச் செயலா் அரங்க.திருநாராயணன், உதவி பொதுச் செயலா் தண்டபாணி, செயற்குழு உறுப்பினா்கள் பாண்டுரங்கன், பூவராகசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், ஓய்வூதியா்களுக்கு 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு திருத்திய ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டச் செயலா் அனந்தபத்மநாபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com