பெண் சந்தேக மரணம்

கடலூரில் பெண் ஒருவா் சந்தேகமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூரில் பெண் ஒருவா் சந்தேகமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் முதுநகா் அருகே உள்ள சுத்துக்குளத்தைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி மங்கையா்கரசி (28). இவா், வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து மங்கையா்கரசியின் தாயாா் கடலூா் குண்டுசாலையை சோ்ந்த சரோஜா, கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், மங்கையா்கரசிக்கும், வேல்முருகனுக்கும் திருமணமாகி 6 ஆண்டுகளாகின்றன. இவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். வேல்முருகன் வேலைக்கு செல்வதில்லை. அடிக்கடி மனைவியை தாக்கி சித்ரவதை செய்து வந்தாா்.

இந்த நிலையில், எனது மகள் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com