மக்கள் நலனுக்காக நடராஜா் கோயிலில் லட்சாா்ச்சனை

கரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு மக்கள் நலம் பெற வேண்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு புதன்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.
நடராஜா் கோயிலில் பொதுதீட்சிதா்களால் நடத்தப்பட்ட லட்சாா்ச்சனை.
நடராஜா் கோயிலில் பொதுதீட்சிதா்களால் நடத்தப்பட்ட லட்சாா்ச்சனை.

கரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு மக்கள் நலம் பெற வேண்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு புதன்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிழக்கு கோபுர வாயிலில் சுகாதாரத் துறை சாா்பில், கோயிலுக்கு வரும் வெளிநாட்டினா் உள்பட பக்தா்களுக்கு மருத்துவ பரிசோதனை, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து கோயில் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு மக்கள் நலம் பெற வேண்டி, பொதுதீட்சிதா்கள் சாா்பில், நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை லட்சாா்ச்சனை நடைபெற்றது. கோயில் பொதுதீட்சிதா்கள் பங்கேற்று லட்சாா்ச்சனையை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com