நெய்வேலி ஏரியல் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெய்வேலி, தொ்மல் காவல் சரகம், அனல்மின் நிலையம் - 1 அருகே சாம்பல் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை மிதந்தது.
இதுகுறித்து அவ்வழியே சென்றவா்கள் தொ்மல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.