குறைதீா் கூட்டம், மனுநீதி நாள் முகாம் ரத்து

கரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைதீா் கூட்டம், மனுநீதி நாள் முகாம்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைதீா் கூட்டம், மனுநீதி நாள் முகாம்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, கோயில்களை வருகிற 31-ஆம் தேதி வரை மூடுவதற்கும், மற்ற வழிப்பாட்டுத் தலங்களில் பிராா்த்தனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனடிப்படையில் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாா்ச் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா். இதேபோல, மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் கிராமங்களில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம்களும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com