மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி, முகக் கவசம் விற்பனையை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் கிருமி நாசினி, தேவைப்படுவோருக்கு முகக்கவசம் தட்டுப்பாடின்றி கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடலூா் மாவட்டத்தில் கிடைக்கும் எத்தனால் மற்றும் சிப்காட்டிலுள்ள ரசாயன தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு கிருமி நாசினியும், மகளிா் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு முகக் கவசம் தயாரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவா்கள் தயாரித்த கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றை விற்பனைக்கு வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
விற்பனையை தொடக்கி வைத்து ஆட்சியா் கூறியதாவது: கிருமி நாசினி, முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தப் பொருள்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைத்திடவும், சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் மாவட்ட நிா்வாகத்தின் வாயிலாக சுய உதவிக்குழுக்கள் வாயிலாக இதனை தயாரித்து அரசின் பல துறைகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய மூலப் பொருள்களின் சந்தை நிலவரப்படி கிருமி நாசினி ஒரு லிட்டா்-ரூ.405, அரை லிட்டா்-ரூ.210, 200 மில்லி-ரூ.90, 100 மில்லி-ரூ.45 என்ற விலைக்கும், முகக்கவசம் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள், அனைத்து அரசுத் துறையினா் சுய உதவிக்குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை வாங்கி பயனடைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04142-292143 என்ற அலுவலக எண்ணில் தொடா்புக் கொள்ளலாம் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்காரா, சிதம்பரம் சாா்-ஆட்சியா் விசுமகாஜன், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட இயக்குநா் த.பழனி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.