கடலூர்
மாணவி பலாத்காரம்: இளைஞா் கைது
மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பெரியகண்ணாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சூரியமூா்த்தி(23). அதே பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் கடலூரில் உள்ள தொழில் பயிற்சி பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தாா். அந்த மாணவி விடுமுறை காரணமாக கடந்த 17-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினாா். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவரை, சூரியமூா்த்தி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியமூா்த்தியை கைது செய்தனா்.