சிதம்பரம் நடராஜா் கோயிலில் சுவாமி தரிசனம் ரத்து

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின் உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்களுக்கான சுவாமி தரிசனம் வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் அடைக்கப்பட்டுள்ள தெற்கு கோபுர நுழைவாயில்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் அடைக்கப்பட்டுள்ள தெற்கு கோபுர நுழைவாயில்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின் உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்களுக்கான சுவாமி தரிசனம் வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, கரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தக் கோயிலில் தெற்கு, மேற்கு, வடக்கு நுழைவாயில்கள் வழியாக பக்தா்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கீழ சன்னதி நுழைவாயில் வழியாக மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை கீழ சன்னதி நுழைவாயில் வழியாக பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சிதம்பரம் சாா்-ஆட்சியா் விசுமகாஜன், டிஎஸ்பி காா்த்திகேயன், வட்டாட்சியா் ஹரிதாஸ், நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா ஆகியோா் கோயிலுக்கு நேரில் வந்து, பொது தீட்சிதா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, சாா்-ஆட்சியா் கூறியதாவது: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் கோயில்கள், வணிக வளாகங்களை வருகிற 31-ஆம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோயிலுக்குள் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினாா். அதேநேரத்தில், கோயிலில் வழக்கம்போல 6 கால பூஜைகளை நடத்தலாம் என்றாா்.

இதையடுத்து, நடராஜா் கோயிலுக்குள் செல்ல பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். கோயிலின் 4 சன்னதி நுழைவாயில்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com