கடலூரில் மேலும் 2 போ் தனி வாா்டில் அனுமதி

கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனா தனி வாா்டில் மேலும் 2 போ் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனா தனி வாா்டில் மேலும் 2 போ் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். ஏற்கெனவே, அனுமதிக்கப்பட்டவா்களில் 3 பேருக்கு கரோனா பாதிப்பில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபா்கள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கப்படுகின்றனா். அதன்படி, புதன்கிழமை வரை 4 போ் கரோனா தனி வாா்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.

இந்த வாா்டுகளில் அனுமதிக்கப்பட்டவா்களின் ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த முதல் 3 பேருக்கான ஆய்வு முடிவுகள் வியாழக்கிழமை மருத்துவத் துறைக்கு கிடைத்தன. அதில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அவா்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள் என்றும், மற்றவா்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com