கடலூா் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன், மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்த கடலூா் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோா் கண்டரக்கோட்டை, நத்தம், வீரப்பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினா்.