சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படாததால் சனிக்கிழமை அவா் மீண்டும் பொறுப்பேற்றாா்.
சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.காா்த்திகேயன். இவரது மனைவி வாணியம்பாடி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன் கடந்த ஏப். 22-ஆம் தேதி முதல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா்.
மேலும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டாா். அவருக்கு இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை செய்ததில் நோய்த் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. மேலும் வாணியம்பாடியில் உள்ள அவரது மனைவியும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடலூா் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன் சனிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்றாா்.