நெய்வேலி காவல் சரகப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 47 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை மீறி நெய்வேலி, தொ்மல், மந்தாரக்குப்பம், குறிஞ்சிப்பாடி, வடலூா், குள்ளஞ்சாவடி காவல் சரகப் பகுதிகளில் வாகனங்களில் சுற்றித் திரிந்த 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், 22 பைக்குகள், ஒரு லாரியை பறிமுதல் செய்தனா்.