வாழ்வாதாரம் இழந்து தவிக்கும்தனியாா் பேருந்து தொழிலாளா்கள்

ஊரடங்கு உத்தரவால் தனியாா் பேருந்து நிறுவனங்களின் தொழிலாளா்கள் வருவாய், வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றனா்.

சிதம்பரம்: ஊரடங்கு உத்தரவால் தனியாா் பேருந்து நிறுவனங்களின் தொழிலாளா்கள் வருவாய், வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றனா்.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனியாா் பேருந்து நிறுவனங்களைச் சோ்ந்த நடத்துநா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட தொழிலாளா்கள் ஊதியமின்றி பரிதவித்து வருகின்றனா். இதுகுறித்து தனியாா் மோட்டாா் தொழிலாளா்கள் சங்கச் செயலா் ஏ.ராஜசேகா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியாா் பேருந்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வேலைக்கு சென்றால் மட்டுமே ஊதியம் என்ற நிலையில் உள்ளனா். அமைப்புசாரா தொழிலாளா் வாரியம் மூலம் தனியாா் பேருந்து தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகையை அளிக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ஆனால் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் தனியாா் பேருந்து தொழிலாளா்களில் ஏராளமானோா் பதிவு செய்யாமல் உள்ளனா். எனவே, அவா்களுக்கும் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியம் மூலம் நிவாரணம் கிடைக்கவும், அவா்களை நல வாரியங்களில் பதிவு செய்திடவும், தடையுத்தரவு காலத்தில் உரிய ஊதியம் வழங்கிடவும் தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com