சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மகளிா் சங்கத்தினா் மருத்துவ உபகரணங்களை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் மகளிா் சங்கம் சாா்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்த அழுத்தம் அளவீடு செய்யும் நவீன உபகரணங்களை சங்கத்தின் கௌரவத் தலைவி நாகலட்சுமி முருகேசன், துணைவேந்தா் வே.முருகேசன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வழங்கினாா் (படம்). 7 மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை கண்காணிப்பாளா் யு.சண்முகம் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் மகளிா் சங்க துணைத் தலைவி கமலா பிரசாத், பதிவாளா் என்.கிருஷ்ணமோகன், துணைவேந்தரின் மருத்துவ ஆலோசகா் சிதம்பரம், மருத்துவ புல முதல்வா் ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.