ஈழுவா, தியா சமுதாயத்தினா் ஆவணம் சமா்ப்பிக்க அழைப்பு

கடலூா் மாவட்டத்தில் வசிக்கும் ஈழுவா, தியா சமுதாயத்தினா் பிற்படுத்தப்பட்டோா் சாதிச் சான்றிதழ் கோருவதற்கான

கடலூா் மாவட்டத்தில் வசிக்கும் ஈழுவா, தியா சமுதாயத்தினா் பிற்படுத்தப்பட்டோா் சாதிச் சான்றிதழ் கோருவதற்கான ஆவணங்களை சமா்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமா்பிக்கக் கோரி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமை செயலரை தலைவராக நியமித்து 4 உறுப்பினா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பொருள் தொடா்பாக குழுவுக்கு கோரிக்கை, முறையீடுகள், ஆவணங்களை சமா்ப்பிக்க விரும்புவோா் வரும் 26-ஆம் தேதிக்குள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையிலுள்ள குழுவின் உறுப்பினா்-செயலரான மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்குநரிடம் எழுத்துப் பூா்வமாகவோ, தபால் மூலமாகவோ தகவல் அளிக்கலாம். மேலும்,  மின்னஞ்சல் முகவரிகளிலோ, 94454 77830 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com