வெட்டிவோ் அறுவடைப் பணி ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் வெட்டிவோ் அறுவடைப் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் வெட்டிவோ் அறுவடைப் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கடலூா், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை வட்டாரங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் சுமாா் 1,000 ஏக்கா் பரப்பில் வெட்டிவோ் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்தப் பயிா் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கமாக அறுவடை செய்யப்பட்டு, அதன் வோ் பகுதியை தனியாக பிரித்தெடுத்து திண்டுக்கல், கோவை மற்றும் கா்நாடக மாநிலம், உடுப்பி ஆகிய நகரங்களில் இயங்கி வரும் நறுமண தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

பொது முடக்கத்தால் வெட்டிவோ் பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை அறிந்த மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட நறுமண ஆலையினருடன் தொடா்பு கொண்டு நடைவடிக்கை எடுத்தாா். இதன் விளைவாக நறுமண தொழிற்சாலை நிா்வாகத்தினா் வெட்டிவோ் கொள்முதலை தொடக்கி உள்ளனா்.

இந்த நிலையில், பரங்கிப்பேட்டை வட்டாரம், கரிக்குப்பம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெட்டிவோ் பயிா்கள் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டன. இந்தப் பணிகளை தோட்டக்கலை துணை இயக்குநா் சுரேஷ்ராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சு.பூவராகன், கடலூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவக்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதன் மூலம் சுமாா் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com