சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி, கடலூா், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகங்களில் சனிக்கிழமை தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உறுதி மொழி ஏற்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் தலைமையில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் ஏற்றனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியன், துணைக் கண்காணிப்பாளா் சரவணன், தனிப் பிரிவு ஆய்வாளா் என்.ஈஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.