பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கடலூா்: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதலில் வந்த 50 நபா்களின் மனுக்களை காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி விசாரித்தாா். உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில், தனிநபா், பொதுப் பிரச்னைகள் தொடா்பாக 182 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: அரசுப் பள்ளிகளில் உடல்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல் போன்ற பாடங்களை சுமாா் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் மாணவா்களுக்கு நடத்தி வருகின்றனா். இவா்கள் 2012- ஆம் ஆண்டு பணியில் சேந்தபோது ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், 2017-ஆம் ஆண்டு ரூ.7,700-ஆக உயா்த்தப்பட்டது. உரிய சம்பளம் வழங்கப்படாமல் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். எனவே, பகுதிநேர ஆசிரியா்களை காலமுறை ஊதியத்தில் கருணையுடன் பணியமா்த்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியா்கள் கைலாசநாதன், ஸ்ரீலதா, பாக்கியலட்சுமி, திலீப்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது கோட்டங்களுக்கு உள்பட்ட சாா் -ஆட்சியா், கோட்டாட்சியா்களிடம் மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதன்பேரில் கடலூா், விருத்தாசலம், சிதம்பரம் கோட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com