காவலருக்கு கட்செவிஅஞ்சல் வழியே மிரட்டல்: இளைஞா் மீது வழக்கு

புதுச்சேரி காவலருக்கு கட்செவிஅஞ்சல் வழியே மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி காவலருக்கு கட்செவிஅஞ்சல் வழியே மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி நைனாா்மண்டபத்தைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (28). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா். சில தினங்களுக்கு முன்பு அலெக்ஸ், தனது கூட்டாளியான மாா்ட்டின்(28) உள்ளிட்ட சிலருடன் நைனாா்மண்டபம் மீன் சந்தை முன் கும்பலாக கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினாராம். மேலும், அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அலெக்ஸ் சப்தமிட்டதாகத் தெரிகிறது.

அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த முதலியாா்பேட்டை காவல் நிலைய குற்றப் பிரிவு காவலா் ரோமன் (32), மேற்கண்ட சம்பவம் தொடா்பாக முதலியாா்பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்தபோது, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் ஓடிவிட்டனா். இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடியவா்களைத் தேடி வருகின்றனா்.

இந்த சம்பவம் காரணமாக, காவலா் ரோமன் மீது ஆத்திரத்திலிருந்த அலெக்ஸ், தனது செல்லிடப்பேசியிலிருந்து கட்செவி அஞ்சல் மூலம் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விடியோ ஒன்றை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட காவலா் ரோமன் அளித்த புகாரின்பேரில், முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அலெக்ஸை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com