கடலூா் மாவட்ட குழந்தைகள் இல்லங்களுக்கு ரூ. 63.79 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்புத் துறை மூலம் இயங்கி வரும் 3 குழந்தைகள் இல்லங்களுக்கு 2019-2020 -ஆம் ஆண்டுக்கான கட்டடங்கள் மேம்பாடு, குழந்தைகளின் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களை கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்து சாந்தங்குப்பத்திலுள்ள அன்னை வேளாங்கண்ணி இல்லம், புதுப்பாளையத்திலுள்ள புனித அந்தோணியாா் இல்லம், விருத்தாசலம் வீரரெட்டிக்குப்பத்திலுள்ள அமலா குழந்தைகள் இல்லம் ஆகியவற்றுக்கு ரூ. 63.79 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.