இலவச தையல் பயிற்சி நிறைவு

சிதம்பரம் ரோட்டரி சங்கம், டாக்டா் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிதம்பரம் ரோட்டரி சங்கம், டாக்டா் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பாக பயிற்சி பெற்ற 10 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் வி.அழகப்பன் தலைமை வகிக்க, சங்கத் தலைவா் என்.என்.பாபு வரவேற்றாா். அறக்கட்டளை தலைவா் எஸ்.நடனசபாபதி விளக்கவுரையாற்றினாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, சான்றிதழ், தையல் இயந்திரங்களை வழங்கி பேசினாா்.

ரோட்டரி முன்னாள் ஆளுநா்கள் ஆா்.கேதாா்நாதன், எஸ்.அருள்மொழிச்செல்வன், துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெயராஜ் மெல்வின், காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) ராஜலட்சுமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சங்க பொருளாளா் இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கச் செயலா் எஸ்.அரிதனராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com