கடலூா் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,576-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 41 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,086-ஆக உயா்ந்தது. தொடா்ந்து 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் உயிரிழப்பு பதிவாகாதது நம்பிக்கை அளித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 272-ஆக தொடா்கிறது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 179 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 39 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 381 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ள நிலையில், 19 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com