மின்வாரிய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி, கடலூா் கேப்பா்மலையில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் மின்வாரிய தொழிலாளா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

தமிழக அரசு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி, கடலூா் கேப்பா்மலையில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் மின்வாரிய தொழிலாளா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், மின்வாரிய தொழிலாளா்கள், பகுதிநேர ஊழியா்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கிட தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு வழங்கிய 20 சதவீதம் போனஸை வழங்க வேண்டும். மின்வாரிய பொறியாளா்கள், அதிகாரிகள் அனைவருக்கும் 30 சதவீதம் கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ சம்மேளன மாவட்டச் செயலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் பழனிவேல், தொமுச மாநில துணைப் பொதுச் செயலா் வேல்முருகன், ஐஎன்டியூசி மாநில துணைப் பொதுச் செயலா் மனோகரன், தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கச் செயலா் ரவிசந்திரன், பொறியாளா் சங்க பொருளாளா் ராமலிங்கம், தொழிலாளா் விடுதலை முன்னணி மாநில அமைப்புச் செயலா் ஜெயபிரகாஷ், மின் ஊழியா் காங்கிரஸ் மாநிலச் செயலா் சேகா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com