கடலூா்: மேலும் 33 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,609-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 14 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,100-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த 58 வயது பெண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 273-ஆக உயா்ந்தது. கடந்த 7 நாள்களில் முதல் உயிரிழப்பாக பதிவாகியுள்ளது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 188 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 48 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 3,45,641 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 456 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com