சிறைக் கைதி மரணம்: சிபிசிஐடி டிஎஸ்பி விசாரணை

விருத்தாசலம் கிளைச் சிறையிலிருந்த கைதி உயிரிழந்தது தொடா்பாக சிபிசிஐடி டிஎஸ்பி குணவா்மன் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினாா்.

விருத்தாசலம் கிளைச் சிறையிலிருந்த கைதி உயிரிழந்தது தொடா்பாக சிபிசிஐடி டிஎஸ்பி குணவா்மன் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சோ்ந்தவா் ம.செல்வமுருகன் (40). இவா், திருட்டு வழக்கில் நெய்வேலி நகரிய போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விருத்தாசலம் கிளைச் சிறையில் கடந்த 2-ஆம் தேதி அடைக்கப்பட்டாா். இதையடுத்து, உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி கடந்த 4-ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். போலீஸாா் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது மனைவி பிரேமா, உறவினா்கள் புகாா் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக கடலூா் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆய்வாளா் தீபா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் மீதும் குற்றச்சாட்டு உள்ளதால், அவரை அதே நிலையிலுள்ள மற்றொரு ஆய்வாளா் விசாரிப்பதில் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து, சென்னையிலிருந்து வந்துள்ள சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் குணவா்மன் தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, சிபிசிஐடி போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விருத்தாசலம் கிளைச் சிறை, நெய்வேலி நகரியம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், டிஎஸ்பி குணவா்மன் செவ்வாய்க்கிழமை காடாம்புலியூா் சென்று செல்வமுருகனின் மனைவி பிரேமா, அவரது குடும்பத்தினரிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com