புதிதாக குளிரூட்டும் பிணவறை பெட்டி வங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவு

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 3 மாதங்களாகச் செயல்படாத குளிரூட்டும் பிணவறை பெட்டிக்குப் பதிலாக புதிய பெட்டி வாங்க மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டாா்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 3 மாதங்களாகச் செயல்படாத குளிரூட்டும் பிணவறை பெட்டிக்குப் பதிலாக புதிய பெட்டி வாங்க மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டாா்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக கொண்டு வரப்படும் சடலங்களைப் பாதுகாக்க குளிரூட்டும் பிணவறைப் பெட்டி பயன்படுத்தப்படும். இங்குள்ள பெட்டி செயல்படாததால், சடலங்கள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, விழுப்புரம்-முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரிக்கு புகாா் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு புதிதாக குளிரூட்டும் பிணவறைப் பெட்டி வாங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய நிலையில், கடலூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் இதுகுறித்து சென்னையிலுள்ள மருத்துவம்- சுகாதாரப் பணிகள் இயக்குநருக்கு புதன்கிழமை கடிதம் எழுதினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com