சிறுபான்மையின மாணவா்கள் (ஷோல்டா்) கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.


கடலூா்: சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் வசித்து வருவோரில் இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சாா்ந்தவா்கள் சிறுபான்மையினராக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் நிகழாண்டு தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கடைசி தேதி நவம்பா் 30-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இணையத்தின் வழியே நிவா்த்தி செய்யப்பட்ட படிவத்தை படியிறக்கம் செய்து அனைத்து ஆவணங்களுடன் கல்வி நிறுவனங்களில் வருகிற 30-ஆம் தேதிக்குள் தவறாது சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com