கடலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.14.83 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.
கடலூா் மாவட்டத்தில் 144 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை ரூ.7.26 கோடிக்கும், தீபாவளி தினமான சனிக்கிழமை ரூ.7.57 கோடிக்கும் என 2 நாள்களிலும் சோ்த்து மொத்தம் ரூ.14.83 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.
கடந்தாண்டு தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாளிலும் சோ்த்து மொத்தம் ரூ.10.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியிருந்தது.
இதன்மூலமாக கடந்தாண்டை விட சுமாா் 50 சதவீதம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகிருப்பது தெரியவந்தது. மாவட்டத்தில் சராசரியாக தினமும் ரூ.1.50 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் மதுபானங்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.