கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலையில் செப்புக் கம்பிகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 30 கிலோ செப்புக் கம்பியை இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை திருடிச் செல்வதை ஆலையின் மேலாளா் பால்ராஜ் பாா்த்துள்ளாா்.
தொடா்ந்து, அங்கிருந்த காவலாளிகள் உதவியுடன் அந்த இளைஞரைப் பிடித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிப்பட்டவா் அரியலூா் மாவட்டம், தனவாய் வடக்கு சிலுப்பனூரைச் சோ்ந்த பாண்டியன் மகன் செந்தில்குமாா் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.