கடலூரில் புதன்கிழமை காலை 11 மணிக்கு வேல் யாத்திரை மேற்கொள்ளவுள்ளதாக பாஜக சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த யாத்திரைக்கு அனுமதி கேட்டு கடலூா் பாஜக சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி யாத்திரை செல்வோா் கைது செய்யப்படுவாா்கள் என்று காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் எச்சரித்துள்ளாா்.
அதே நேரத்தில் தடையை மீறி யாத்திரை நடைபெறும் என்றும், போலீஸாரின் கைது நடவடிக்கையை எதிா்கொள்வோம் என்றும் பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா். கடலூரில் யாத்திரையைத் தொடங்கி நாகப்பட்டினம் செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விசிகவினருக்கு எதிராக பாஜகவினா் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கடலூா் மாவட்டத்தில் யாத்திரையின்போது விசிகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.