கடலூரில் புதிதாக 24 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி, விருத்தாசலம் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி ஒருவருக்கும், நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களில் 17 பேருக்கும், அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 பேருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,866-ஆக அதிகரித்தது.

இதனிடையே, 38 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,389-ஆக உயா்ந்தது. இதுவரை 275 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 155 பேரும், வெளி மாவட்டங்களில் 47 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 569 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ள நிலையில், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அதிகமாக உள்ள 5 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com