கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவிலிருந்து தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முழுவதும் பரவலாக மழை பெய்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்): வானமாதேவி 76, குடிதாங்கி 74, தொழுதூா் 55, கடலூா் 47.6, பெலாந்துறை 46, ஸ்ரீமுஷ்ணம் 45.2, லக்கூா் 44.2, பண்ருட்டி 44, புவனகிரி 43, மாவட்ட ஆட்சியரகம் 42.1, கீழச்செருவாய் 42, வேப்பூா் 39, அண்ணாமலை நகா் 36.2, காட்டுமைலூா் 35, சேத்தியாத்தோப்பு 34, கொத்தவாச்சேரி 31, சிதம்பரம் 30.8, குப்பநத்தம் 28.4, மேமாத்தூா் 28, குறிஞ்சிப்பாடி 27.5, பரங்கிப்பேட்டை 27.2, லால்பேட்டை, விருத்தாசலம் தலா 27, வடக்குத்து 24, காட்டுமன்னாா்கோவில் 23.3 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.
தொடா் மழை காரணமாக, பல்வேறு ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதோடு, ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன.