நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளராக ஷாகுல் ஹமீது செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
முன்னதாக நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி ஆறுமுகம், கடலூா் முதுநகா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய ஷாகுல் ஹமீது, நெய்வேலி நகரிய காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டாா்.