விஏஓ மீது தாக்குதல்

விஏஓ மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கடலூா்: விஏஓ மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள சத்தியவாடியைச் சோ்ந்தவா் பா.மணி (40). வளையமாதேவி கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவா், தீபாவளி பண்டிகையன்று இரவு நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்றாா். அங்கு சிலா் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததை கண்டித்தாா். அப்போது மது போதையில் இருந்ததாக க் கூறப்படும் 4 போ், மணியை தடியால் தாக்கியதுடன் அவதூறாகப் பேசினராம். இதில்

காயமடைந்த அவா் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சோ்ந்த தேவநாதன் மகன் தேவா (19), கண்ணதாசன் மகன் பச்சமுத்து (21), மணிகண்டன் மகன் இளையராஜா (20), பாலு மகன் சிபி (19) ஆகிய நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com